Wednesday, January 07, 2009

Hacking puzzle

கூரையேறி குருவி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்ட போறானாம் என்பார்கள்.

இங்கே ஒரு சவால்.

(ஏற்கனவே தெரிந்தோர் மன்னிக்கவும்).


இங்கே சொடுக்கி அது வழிகாட்டும்/கொடுக்கும் தகவல்களை கொண்டு ஒவ்வொரு பக்கமாக முன்னேறிப் பாருங்கள்.

கொஞ்சம் சிந்திக்க வேண்டும். கூகிள் ஆண்டவர் உங்களுடன் துணையிருப்பாராக ! எத்தனை பக்கங்கள் முன்னேறினீர்களென பார்க்கலாம்.

மொத்தமாய் Hack செய்ய சாதாரணமாய் 10 நிமிடம் போதுமாம். நினைவிருக்கட்டும் 23 பக்கங்கள் வரை முன்னேறினால் மிஸன் வெற்றிகரமாய் கிட்டியதாகும்.

முடியாவிட்டால் என்னைத் தனி மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.


 

http://www.freestuffhotdeals.com/hacker/1.html

Friday, October 24, 2008

பணமழை

பணமழை பெய்யுது இங்கே!
நிறைய வழிகள் உள்ளன பணம்சம்பாதிக்க அந்த வழி உங்களுக்காக நண்பர்களே!

உங்களுக்கு வேண்டுமானால் பின் வரும் பொத்தனை கிளிக் செய்யுங்கள்



$6.00 Welcome Survey After Free Registration!

Tuesday, June 17, 2008

தசாவதாரத்தை இப்படியும் அலசலாமே?

தசாவதாரம் படத்தில் கமலின் பத்து அவதாரப் பெயர்கள் :

ரங்கராஜ நம்பி
கோவிந்த் சாமி
கிறிஸ்டியன் ப்ளெட்சர்
பல்ராம் நாயுடு
கிருஷ்ணவேணி பாட்டி
ஷிங்கென் நரஹாஷி
அவ்தார் சிங்
கலிபுல்லா கான்
வின்சென்ட் பூவராகன்
ஜார்ஜ் புஷ்

உலக அழிவிலிருந்து வேதங்களைக் காப்பாற்றி கடலுக்குள் ஒளித்து வைக்க – மச்சாவதாரம்
(உலக மக்களை Virus அழிவிலிருந்து காப்பாற்ற) சுனாமியை உருவாக்கும் பரந்தாமன் சிலையை கடலுக்குள் ஒளித்து வைக்க? - ரங்கராஜன் நம்பி.


தேவர்கள், பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும் என்றும் அதை எடுத்து உண்டால் மரணமில்லாமல் என்றும் இளமையுடன் வாழலாம் என்றும் முடிவு செய்து கிருஷ்ணனின் உதவியையும் கேட்டனர். வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு மேரு மலையை மத்தாக கொண்டு பாற்கடலை கடைய ஆரம்பித்தனர். வாசுகிப் பாம்பின் தலைப்பகுதியை தேவர்கள் பிடிக்கப் பயந்ததினால் அசுரர்களையும் சேர்த்துக் கொண்டனர். மத்துக்கு கீழே முட்டுக் கொடுக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தாங்கிபிடித்தாராம் கிருஷ்ணன். அவ்வாறு பாற்கடல் கடையும் போது அதிலிருந்து தோன்றியதுதான் காமதேனு, கற்பகவிருட்ஷம், லக்ஷ்மி , ஆலகால விஷம்,
Biotecnology விஞ்ஞானியாக வரும் கோவிந்த் Bio–Weapons ஆராய்ச்சியை தாங்குவதால் கூர்மாவதாரத்திற்கு ஒப்பிடலாமா?

பூமியைக் காக்க வராஹ அவதாரம்
மண்ணைக் காக்க (மணல் கொள்ளையை தடுக்க) – பூவராகன் (அட பெயர் பொருத்தத்தைக் கவனியுங்கள்)


ஹிரண்ய கசிபுவை வதம் செய்ய நரசிம்ஹ அவதாரம்
கிறிஸ்டியன் ப்ளெட்சர் எனும் தீவிரவாதியை வதம் செய்ய - ஷிங்கென் நரஹாஷி (இங்கேயும் பெயர் பொருத்தம் சரி வருதோ?)


வாமனாவதாரத்தில் மூன்றடி நிலம் கேட்டார்
கபிபுல்லா –வாக எட்டடி உயரத்துடன் மசூதிக்காக நிலம் கொடை செய்கிறார்


பல்ராம் நாயுடு – அட பெயரிலேயே பலராமரா?


கிருஷ்ணவேணி – அடடே மீண்டும் ஒற்றுமை

மற்ற ஒற்றுமைகள் என்ன என்று அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
அவ்தார் சிங் - ????
ஜார்ஜ் புஷ்- ????
கிறிஸ்டியன் ப்ளெட்சர் - ????
இவ்வளவு யோசிச்சதுக்கு இப்பவே கண்ணைக்கட்டுதே!

Monday, June 16, 2008

கேயாஸ் (chaos) தியரி

இப்பொழுதுதான் "தசாவதாரம்" பார்த்துவிட்டு வந்தேன். ஆனால் இப்பதிவு தசாவதாரத்தைப் பற்றியதல்ல, அதில் குறிப்பிடப்படும் கேயாஸ் (CHAOS) தியரியைப் பற்றியது. எழுத்தாளர் சுஜாதா எழுதியது.


சுஜாதாவின் கற்றது பெற்றதுவுமில் கேயாஸ் தியரியைப் பற்றி கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்.



கேயாஸ் (chaos) தியரி:
லொரென்ஸ் என்பவர் அறுபதுகளில் முதலில் அறிவித்த சித்தாந்தம் இது. லொரென்ஸின் ஆதார மேற்கோள் ஒன்று விஞ்ஞானிகளை/அறிவாளிகளை மிகவும் சிந்திக்க வைத்து, இது ஒரு தனி இயலாக வளரும் அளவுக்கு கேயாஸ் தியரி முக்கியமடைந்தது.


பட்டாம்பூச்சி விளைவு(Butterfly Effect):
ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு, சூழ்நிலையில் மிகச்சிறிய மாறுதலை ஏற்படுத்துகிறது. சிறிது காலம் பொறுத்து சூழ்நிலையில் நிகழ்வது, நிகழ்ந்திருக்க வேண்டியதுடன் வேறுபடுகிறது. எனவே, ஒரு மாதத்தில் இந்தோனேசிய கடற்கரையை நாசமாக்கவிருந்த சுழற்காற்று நிகழ்வதில்லை.. அல்லது, எதிர்பாராமல் நிகழ்ந்துவிடுகிறது. ஒரு சின்ன நிகழ்வின் தொடர்விளைவு உலகளாவியதாக இருக்கும் என்பதே அந்தத் தியரியின் அடிப்படை.

உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தொடர்புகள் உள்ளதாகக் கொள்ளலாம் இந்த தியரியின் அடிப்படையில். அதே சமயம் ஒரு மனிதனின் செயல்பாடு ஒரு நிகழ்வின் முடிவை மாற்றிவிடலாம் என்பதாக உள்ளது இந்தத் தியரியின் மூலம்.

மெய்ஞானம்:
"நம் எண்ணங்களே ஆகாயத்தை உருவாக்குகிறது" என்கிறது மெய்ஞானம். ஆகாயம் என்பதனை அதில் உள்ள நிகழ்வினை எனக்கொண்டால் மேலே உள்ள தியரிக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை என்பதாக உள்ளது. அதே சமயம் மெய்ஞானம் விதி எனும் கோட்பாடினைக் கூறி இந்த உலகில் நடக்கவிருப்பவையை மாற்றமுடியாது எனவும் கூறுகிறது. இந்த விதி எனும் சதிதான் இரண்டுக்குமான முரண்பாடாக உள்ளது.
இது தான் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் உள்ள பெரிய இடைவெளி. விஞ்ஞானம் ஒவ்வொன்றினையும் தனித்தனியாக கண்டு வருகிறது. அதனையும் மெய்ஞானம் கண்டவற்றுடன் இணைத்தால் உலகம் மிக எளிமையாகிவிடும்.

இந்த உலகம் எப்படி உருவானது என்பதற்கு குவாண்டம் விஞ்ஞானம் கண்ட பதில், பொருள் (partical) எதிர்பொருள் (antiparticle) ஆகியவை இந்த உலகில் சம அளவில் இல்லை எனவும் அதன் காரணமாக அணுக்கள் உருவாகி இந்த உலகம் உருவாகியுள்ளது என்பதாகக் கண்டுள்ளது. அதற்கான காரணம் அணுவில் உள்ள weak force-னால் நடக்கும் வினைகளில் பெரும்பான்மையான வினைகளில் சமதளங்களை (symmetry) ஒத்துக்கொள்வதில்லை என்பதாகக் கண்டுள்ளது. அதாவது அந்த வினைகளினால் நடக்கும் மாற்றங்களை மீட்டெடுக்க முடியாது. இந்த குவாண்டம் இயலின் அடிப்படையில் உலகில் நடக்கும் நிகழ்வுகள் நடந்தே தீரும். அதே சமயம் சமதளங்களை ஒத்துக்கொள்ளும் வினைகளை மீட்டெடுக்க முடியும் அதன் அடிப்படையில் நடக்கும் நிகழ்வுகளை மீட்டெடுக்க முடியும். இந்த இரண்டும் எந்த அளவு நடக்கின்றன என்பதனை விளக்கமாகப் பார்ப்போம்,

இயற்பியல் விதிகள் C,P,T எனும் சமதள அடிப்படையை ஒத்துப்போக வேண்டும். இதனை C,P,T விதி என்கிறார்கள். இதில்

C- Charge(Means Laws are same for particle/Anti particle)
P- Right/Left(Means Laws are same for Mirror image of a partilce or spin)
T- Time (Means Reverse the direction of motion of all particles, the system should go back to what it was at earlier times- Past/Future)

அணுவின் நான்கு விசைகளான Weak force, Strong force, Electromagnetic force & Gravitational force இவைகளில் gravitational force ஐத் தவிர்த்து மற்ற மூன்று விசைகளின் செயல்பாடுகளில் C,P,T விதியினை அடிப்படையில் பார்ப்போமானால்

Electromagnetic force - Obey C,P,T Symmetry (1)
Strong force - Obey C,P,T Symmetry (2)
Weak force - Obey C,P symmetry (3)
Weak force - Does not obey C,P symmetry (4) (in certain particles called K-mesons)
Weak force - Does not obey C symmetry (5)
Weak force - Does not obey P symmetry (6)
Weak force - Does not obey T symmetry (7)

எனும் ஏழுவிதமாக வினைகளின் செயல்பாடுகளை வகைப்படுத்தலாம். உருவாகும் அணுவின் கூறுகள் 7. (3 குவார்க்குகள் இணைந்து ஒரு புரோட்டான், 3குவார்க்குகள் இணைந்து ஒரு நியுட்ரான் மற்றும் ஒரு எலெக்ட்ரான் ஆக 7). மனிதனின் புலன்களின் மூலம் உணரும் ஏழு ஸ்வரங்கள், ஏழு நிறங்கள், ஏழு ருசிகள்... எனக் கொள்ளலாமா!!!!!!!

மேலும் இதனை நான்காக வகைப்படுத்தலாம்,

Electromagnetic force - Obey C,P,T Symmetry (1)- இது ஒன்று
Strong force - Obey C,P,T Symmetry (2)- இது இரண்டு
Weak force - Obey C,P symmetry (3)- இது மூன்று

Weak force - Does not obey C,P symmetry (4)
Weak force - Does not obey C symmetry (5)
Weak force - Does not obey P symmetry (6)
Weak force - Does not obey T symmetry (7)-
இவை நான்கும் இணைந்த நான்கு

இப்போது மனிதனின் எண்ணங்களும் நான்கு எனும் ஞானிகளின் கூற்றினை மேலே உள்ள வினைகளின் செயல்பாடுகளை அதற்கான அடிப்படையாக கொண்டால், 'Obey' மூன்றும், 'Does not obey' நான்கும் கொண்டதாக உள்ளது. இதனை நம் மனம் எனும் சித்தி, புத்தி, அஹங்காரம் இவை மூன்றின் செயல்பாடுகளாகக் கொண்டு பார்த்தால் மனிதர்களின் பார்வை மூன்றில் இரண்டு 'Does not obey'யைக் கொண்டும், ஒன்று 'Obey'யைக் கொண்டும் இயங்குவதாகக் கொண்டால் மூன்றில் இரண்டு எனும் விதத்தில் ஒட்டுமொத்த உலக மனிதர்களின் விதி தீர்மானிக்கப்படக்கூடியதே என்பதாக வருகிறது.

சரி, அது எப்படி 'Does not obey'யை இரண்டும் 'Obey'யை ஒன்று என தீர்மானிக்கலாம், மாறி இருக்கக்கூடாதா என நீங்கள் வினவலாம்.

இங்குதான் வருகிறது gravitational force.. எனது கருதுகோளின்படி gravitational force என்பது அணுவின் force துகள்களின் duality/ இருமைப்பண்பின் அலை வடிவம். அது தனியாக இல்லை. இதனால் அணுக்களின் இந்த 'Does not obey' எனும் செயல்பாடு என்னவாகிறது என்றால் அது அந்த அணுவின் 'Weak force'களின் இருமைப்பண்பில் அலை வடிவமான ஈர்ப்பு விசை அதிகரிப்பாக மாறிவிடுவதால், அணுக்களாக அல்லது பார்க்கும் (physical) பொருளாக மாறியுள்ளது.

அந்தப்படியான அணுக்களில் இருந்தே நாம் தோன்றியுள்ளதால் நம்முடைய பெருவாரியான எண்ணங்கள் 'does not obey' யினால் உருவான பொருள்(materialistic) சார்ந்தே இருக்கும். இதனை மாற்றி பெருவாரியானவர்கள் 'obey' எனும் கோட்பாட்டிற்கு கொண்டு வருவதே ஞானம் எனும் மெய்ஞானம், அதனை அறிய முற்படுவதே விஞ்ஞானம்.

அவ்வாறு மாறினால் புயல் என்ன மனிதனின் விதியையே மாற்றிவிடலாம், ஏனென்றால் 'Obey' எனும் விதியின் கீழ் வருவது இதுவும் தானே- T-Time(Means Reverse the direction of motion of all particles, the system should go back to what it was at earlier times- Past)

அதாவது தாயுமானவர் பாடலில் சொல்லியபடி 'சந்தகமும் இளமையோடு இருக்கலாம்'






மேலதிக வாசிப்புகள்


Butterfly effect


Chaos Theory

Sunday, July 08, 2007

Live Search

Live Search

Friday, March 31, 2006

விஞ்ஞானத்தில் வினாடி-வினா

விஞ்ஞானத்தில் வினாடி-வினா
============================

1. ஆற்றின் ஒரு கரையில் இருந்து ஒலி எழுப்பினால் அது மறு கரையில் இரு முறை ஒலி ஏற்படுத்துவது ஏன்?

நீர் ஓர் ஒலி கடத்தி, காற்றைவிட வேகமாக ஒலியைக் கடத்தும் சக்தி வாய்ந்தது. எனவே ஒரு கரையில் எழுப்படுகிற ஒலி மறு கரையில் நீ¡¢ன் மூலமாக முதலாவதாகவும் காற்றின் மூலமாக இரண்டாவதாகவும் ஒலிக்கிறது.

2. தண்ணீரை விட அதன் நுரை வெண்மையாகத் தெரிவது ஏன்?

தண்ணீரின் மேல் விழும் ஒளிக் கதிர்கள் நீரில் ஊடுருவி உள்ளே சென்றுவிடும். ஆனால் நீரின் நுரை மீது விழும் ஒளிக்கதிர் பிரதிபலிக்கிறது. எனவே நீரின் நுரை வெண்மையாகத் தொ¢கிறது.

3. மனித உடலில் உள்ள இரத்தத்தின் வகைகள் யாவை?

இரத்தத்தை நான்கு வகைகளாகப் பிரித்துள்ளனர். அவை A, B, AB, O என்பனவாகும்.

4. நமது எடையில் இரத்தத்தின் எடை என்ன விகிதத்தில் உள்ளது?

நமது உடலின் எடையில் இரத்தத்தின் எடை 9% ஆகும்.

5. நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?

சர்ஜேம்ஸ்வாட் என்பவர் நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தார்.

6. பருமனான கம்பி அல்லது மெல்லிய கம்பி இவற்றில் அதிக சுருதியை ஏற்படுத்த எந்த வகைக் கம்பி பயன்படுத்தப் படவேண்டும்?

மெல்லிய கம்பி பயன்படுத்தப்பட வேண்டும்.

7. சுரமானி என்றால் என்ன?

இழுத்துக் கட்டப்பட்டுள்ள கம்பிகளின் அதிர்வுகளைக் கண்டறியப் பயன்படும் கருவி சுரமானி என்பதாகும்.

8. தண்ணீரில் மூழ்கும் இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதப்பது ஏன்?

தண்ணீரின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைக் காட்டிலும் குறைவு. எனவே இரும்பு குண்டு நீ¡¢ல் மூழ்குகிறது.

பாதரசத்தின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைவிட அதிகம். எனவே பாதரசத்தில் இரும்புக் குண்டு மிதக்கிறது.

9. மிக விரைவில் ஆவியாகும் திரவம் எது?

ஆல்கஹால்

10. மனித உடலில் உள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206

11. தங்கம், பாதரசம் இவற்றின் அடர்த்தி எண்களைக் கூறுக?

தங்கத்தின் அடர்த்தி எண் 19.3 கிராம். பாதரசத்தின் அடர்த்தி எண் 13.6 கிராம்.

12. கடலின் ஆழம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கடலின் அடிப்பகுதியில் ஒருவெடிகுண்டு வெடிக்கச் செய்வர். அந்த வெடியின் ஒலிகரையை வந்தடையும் நேரத்தை ஹைடிரோ போன்கள் என்ற இயந்திரத்தில் பதிவு செய்து கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கணக்கிடுகின்றனர்.

13. ரயில் எஞ்சினின் முன் உள்ள விளக்குகளின் ஒளி அதிக தூரம் வரை தெரிகிறது. சாதாரண மின் விளக்குகள் அவ்வளவு தொலைவு தெரிவதில்லையே ஏன்?

ரயில் எஞ்சின் முன் விளக்குகளில் குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை ஆடிகள் தம் மீது விழும் ஒளியைப் பிரதிபலித்து வெகு தூரம் வரை பாய்ச்சும் தன்மை உடையது.

14. சிறிய இரும்புகுண்டு தண்ணீரில் மூழ்கி விடுகிறது. ஆனால் மிகப் பெரிய கப்பல் நீரில் மிதக்கிறது. அது எப்படி?

சிறிய இரும்புகுண்டு தண்ணீரில் மூழ்கும்போது அது வெளியேற்றும் தண்ணீ¡¢ன் அடர்த்தி எண்ணைவிட இரும்பு குண்டு அதிக அடர்த்தி உடையது. எனவே இரும்பு குண்டு நீரில் மூழ்குகிறது.

பெரிய கப்பல் நீரில் மிதக்கும் போது அதனால் வெளியேற்றப்படும் தண்ணீரின் அடர்த்தி கப்பலின் எடையைவிட அதிகம். எனவே கப்பல் மிதக்குகிறது.

15. மயக்கமடைந்தவர்களைத் தரையில் கிடத்தும் போது தலை சற்று தாழ்வாகவும், உடல் சற்று மேலாகவும் கிடத்த வேண்டும் ஏன்?

தலைப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும் என்பதற்காக. ரத்த ஓட்டம் அதிகமானால் விரைவில் மயக்கம் தெளிவு பெறும்.

16. ஏரி, குளங்களில் காணப்படும் நீன் மேற்பகுதி வெப்பமாக இருக்கும். ஆனால் நீரின் அடிப்பகுதி குளிர்ச்சியாகவே இருக்கும் ஏன்?

நீர் ஓர் அரிதில் கடத்தி, எனவே வெப்பம் நீ¡¢ன் மேற் பகுதியிலேயே ஆவியாகி சென்று விடுகிறது. ஆகவே நீரின் அடிப்பகுதி குளிர்ச்சியாக இருக்கிறது.

17. பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார்?

சர்ஐசக் நியூட்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். இவர் 1642 ஆம் ஆண்டு லிங்கன்ஷயர் எனும் இடத்தில் பிறந்தார்.

18. கோடை காலத்தை விட குளிர்காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம் ஏன்?

கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக கழிவு நீர்வியர்வையாக வெளியேறுகிறது. குளிர்காலத்தில் அதிக வியர்வை ஏற்படுவதில்லை. எனவே குளிர் காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம்.

19. காற்று வேகமானி (Anemo meter) என்றால் என்ன? அதன் பயன் யாது?

காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவிக்கு காற்று வேகமானி என்று பெயர். இது வானிலை ஆராய்ச்சி நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.

20. வானில் ஏற்படும் இடி, மின்னல் பூமியை வந்தடையும் போது இடி ஓசை இரண்டாவதாகவும் மின்னல் ஒளி முதலாவதாகவும் வந்தடைவதேன்?

ஒலியின் வேகத்தைவிட ஒளி (மின்னல்) பாயும் வேகம் அதிகம். எனவே இடி இரண்டாவதாகவும் மின்னல் முதலாவதாகவும் பூமியை வந்தடைகின்றன.

21. மனித உடலில் மார்பறையையும் வயிற்றறையையும் பி¡¢க்கும் சுவரின் பெயர் என்ன?

உதரவிதானம்.

22. எலும்பு மண்டலம் என்பது யாது? அதன் பயன் என்ன?

உடலில் அடங்கியுள்ள எல்லா எலும்புகளையும் மொத்தமாக எலும்பு மண்டலம் என்பர். இவை உடல் உறுப்புகளின் பாதுகாப்பிற்கும், ஆதரவு இயக்கம் ஆகியவற்றிற்கும் பயன்படுகின்றன.

23. தசைகளின் பயன் யாது?

உடல் உறுப்புகளின் அசைவிற்கும், இயக்கத்திற்கும் இணைப்பிற்கும் பயன்படுகிறது.

24. உணவு ஜீரண மண்டலம் என்பது யாது? அதன் பயன் யாவை?

வாய், தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சொ¢ப்பு நீர் சுரப்பிகளும் உணவு ஜீரண மண்டலம் ஆகும். இவை உணவு ஜீரணிக்கவும், உட்கிரகிக்கவுமே உதவுகின்றன.

25. சிறுநீரகங்கள் சா¢யான முறையில் வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

சிறுநீர் வெளியேறுவதால் ரத்தத்தின் காரத் தன்மை காக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள கழிவு நீர் போக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள யூரியா, யூரிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களும் நச்சு கிருமிகளும் வெளியேற்றப்படுகின்றன. உடலில் இரத்தத்தின் அளவை மற்றும் வெப்ப அளவைச் சீராகப் பாதுகாத்து வைக்கிறது.

26. கொதிக்க வைத்த பிறகு குளிர்ச்சியான நீரில் மீன் உயிர் வாழ முடியாது ஏன்?

நீரைக் கொதிக்க வைக்கும்போது மீன் சுவாசிகத் தேவையான ஆக்ஸிஜன் அந்நீரில் இருந்து வெளியேறி விடுகிறது. எனவே மீன் உயிர் வாழ முடிவதில்லை.

27. சளி பிடித்திருக்கும் போது காது சா¢யாகக் கேட்பதில்லையே ஏன்?

யூஸ்டேனியன் எனும் குழாய் சளிப் படலத்தினால் அடைக்கப்படுகிறது. எனவே செவிப்பறையின் காற்றழுத்தம் இருபுறமும் சமமாக இராது. இது செவிப்பறையின் அதிர்வை பாதிக்கிறது. எனவே சளி பிடித்திருக்கும் போது காது சரியாக கேட்பதில்லை.

28. இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

மரங்கள், காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. மனிதர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. எனவே இரவு நேரங்களின் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது.

29. நாம் உலகில் காணும் பொருட்கள் எவ்வகை நிலைகளில் காணப்படுகின்றன?

மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. 1. திண்ம நிலை 2. நீர்மநிலை 3. வாயு நிலை

30. அணு அமைப்பைப் பற்றி உலகுக்குச் சா¢யானபடி எடுத்துக் கூறிய அறிவியல் மேதை யார்?

ரூதர்•போர்டு

31. எலக்ட்ரான் பாதைகளைப் பற்றி ஆராய்ந்த அறிவியலார் யார்?

பா¢, லூயிஸ், லாங்யூர்.

32. மின்னாற் பகுப்பு விதி முறைகளைக் கண்டறிந்தவர் யார்?

மைக்கேல் பாரடே

33. அல்லி வட்டம் எத்தனை வகைப்படும்?

நான்கு வகைப்படும்.

34. மூட்டு என்றால் என்ன?

மனித உடலில் இரண்டும் அதற்கும் மேற்பட்ட எலும்புகள் ஒன்றாக இணைந்திருப்பது மூட்டு ஆகும்.

35. இரும்பின் வகைகளைக் கூறு?

இரும்பை மூன்று வகைகளாகப் பி¡¢க்கலாம்.
அவை யாவன 1. தேனிரும்பு 2. வார்ப்பிரும்பு, 3. எ•கு இரும்பு.

மின்சார வேலைகளைச் செய்யும் போது கையில் ரப்பர் உறை அணிந்து கொள்வது ஏன்?

ரப்பர் மின்சாரத்தைக் கடத்தாது. எனவே ரப்பர் உறை பயன்படுத்துகின்றனர்.


ஸ்பீடோ மீட்டர் (Speedo Meter) என்றால் என்ன?

கார், லாரி, ஸ்கூட்டர் போன்ற வாகனங்களில் செல்லும்போது வேகங்களைக் கண்டு கொள்ள பயன்படும் கருவிக்கு ஸ்பீடோ மீட்டர் என்று பெயர்.


பெட்ரோல் டாங்கிகள் எவ்வகை வண்ணத்தால் பூசப்படுகிறது? ஏன்?

பெட்ரோல் டாங்கிகளுக்கு அலுமினிய வண்ணம் பூசப்படுகிறது. இவ்வண்ணம் காற்று உட்புகாமலும் எளிதில் துருப்பிடிக்காத வகையிலும் பாதுகாக்கிறது.


பால்மானியைப் பயன்படுத்தும் முறையை கூறுக?

பால் மானியின் மேற் பகுதியில் "W" என்றும், கீழ்ப் பகுதியில் "M" என்றும் குறிக்கப்பட்டிருக்கும், பாலினுள் மானி அமிழ்ந்திருக்கும் அளவினைக் கொண்டு பாலில் கலந்துள்ள நீ¡¢ன் விகிதத்தை அறியலாம். "M" என்ற குறியில் இருந்தால் கலப்பட மற்றது என அறியலாம்.


மூட்டுக்களின் வகைகள் யாவை?

மூட்டுக்களின் வகைகள் இரண்டு
அவை 1. அசையும் மூட்டு, 2. அசையா மூட்டு.


நம் கால்பாதங்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை என்ன?

பதினான்கு


நம் மனித உடலில் உள்ள முதுகெலும்புத் தொடா¢ன் நீளம் என்ன?

சுமார் 60 முதல் 70 செ.மீ. வரை


கேளா ஒலி அலைகள் என்றால் என்ன?

நம் செவிகளுக்கு நொடிக்கு 20 முதல் 20,000 வரை அடுக்கம் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்கும் சக்தி உள்ளது. நம் காதுகளுக்குக் கேட்க முடியாத ஒலி அலைகளை கேளா ஒலி அலைகள் எனக் குறிப்பிடுகின்றனர்.


சிறுநீ¡¢ல் அடங்கியுள்ள இயைபுகள் யாவை?

அவை என்ன விகிதத்தில் அடங்கியுள்ளன எனக் கூறுக?
சிறுநீரில் நீர் 96%, யூரியா 2%, யூரிக் அமிலம் 0.05%, அமோனியாக் கூட்டுப் பொருள் 0.05%, செயல்படா கார்மோன்கள் 1% அடங்கியுள்ளன.


பூமியின் புவியீர்ப்பு விசைக்கும் சந்திரனின் புவியீர்ப்பு விசைக்கும் உள்ள வேறுபாடு என்ன?


பூமியில் ஒரு பொருளின் எடை 120 கிலோ என்றால் சந்திரனில் அதன் எடை 20 கிலோ மட்டுமே இதற்குக் காரணம் பூமியின் புவியீர்ப்பு விசை சந்திரனின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சுமார் 6 மடங்கு அதிகமாக உள்ளதேயாகும்.


கடலின் ஆழத்தைக் கணக்கிடும் அளவு முறையின் பெயர் என்ன?

பேத்தம் (Fathom)

முதல், முதல் சினிமா காட்சி எங்கு காட்டப்பட்டது?

1895ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி பாரிஸ் நகரில் முதன் முதலாக பொதுமக்களுக்குச் சினிமா காட்சி காட்டப்பட்டது.


விசைத் தறியை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்?

எட்மண்ட் கார்ட்ரைட் என்ற இங்கிலாந்து நாட்டு மேதை 1785ம் ஆண்டு விசைத்தறியைக் கண்டறிந்தார்.


ஒலி பெருக்கியைத் கண்டறிந்தவர் யார்?

ரைஸ் கெல்லாக் என்ற அமெரிக்க நாட்டுவிஞ்ஞானி 1924ம் ஆண்டு ஒலி பெருக்கிக் கருவியைக் கண்டறிந்தார்.


ரேடியத்தைக் கண்டு பிடித்தவர் யார்?

ரேடியத்தை மேரிகியூரி அம்மையாரும், அவர் கணவர் பியரிகியூரி என்பவரும் இணைந்து 1898ம் ஆண்டு ரேடியத்தைக் கண்டு பிடித்தார்கள்.


மின்னோட்டத்தின் அளவை அளக்கப் பயன்படும் அளவு முறையின் பெயர் என்ன?

கூலும் என்பதாகும். இவர் மின்னோட்ட அளவு பற்றி ஆய்வு நடத்திய ஓர் அறிவியல் அறிஞர். எனவே அவர் பெயரால் கூலும் என்றே கணக்கிடப்படுகிறது.


பலூனை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?

1783ம் ஆண்டு ஜாக்கியுஸ் என்பவரும் ஜோசப் என்பவரும் கண்டறிந்தனர். இவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.


பால் பாய்ண்ட் (Ballpoint) பேனாவை கண்டுபிடித்தவர் யார்?
அமொ¢க்க நாட்டைச் சேர்ந்த ஜான்ஜே-லவ்டு என்ற விஞ்ஞானி 1888ம் ஆண்டு பால்பாய்ண்ட் பேனாவைக் கண்டறிந்தார்.

திரைப்படங்களில் பேசும் முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் யாவர்?

வார்னர் பிரதர்ஸ் என்ற அமொ¢க்க நாட்டவர் வார்னர் தியேட்டா¢ல் 1926ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ம் தேதி முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.


டெலி பிரிண்டர் என்றால் என்ன?

தந்தி மூலம் வரும் செய்திகளை உடனுக்குடன் அச்சிட்டுத் தருகின்ற இயந்திரம் "டெலி பிரிண்டர்" ஆகும். இது ஒரு நிமிடத்திற்கு சுமார் 50 வார்த்தைகளுக்கு மேலும் ஒரே நேரத்தில் ஒரு செய்தியை பல இடங்களுக்கு அனுப்பவும் உதவுகிறது.


கடற்பாசிகளின் பயன் யாது?

கடற்பாசிகள் தாவரங்களுக்கு உரம் தயா¡¢க்கவும், கால் நடைகளுக்கு உணவு பொருட்களுடன் கலந்து கொடுக்கவும், மருத்துவத் துறையில் பலவகை மருந்துகள் தயாரிக்கவும், பயன்படுகிறது மேலை நாடுகள் சிலவற்றில் பக்குவப்படுத்தி உணவாகவும் பயன்படுகிறது.


மீன்களில் எத்தனை வகைகள் உள்ளன?

மீன்களில் சுமார் 1500 வகைகள் உள்ளன?


மீன்களிலேயே அதி வேகமாக நீந்தும் மீன் எது?

சுறாமீன்


உலகிலேயே அதிக அளவில் மின்சார ரயில்கள் எந்த நாட்டில் உள்ளன?

சோவியத் ரஷ்யாவில் உள்ளன.


பாக்டீரியாக்களினால் ஏற்படும் நன்மை யாவை?

பாக்டீரியாக்களால் பால் தயிராக மாறுகிறது. மேலும் தோல் பதனிடுதல், தேயிலை, புகையிலை ஆகியன பதப்படுத்தவும் கோக்கோ பானத்திற்கு வண்ணமும், மணமும் பாக்டீ¡¢யாக்களாலேயே ஏற்படுகிறது. மருத்துவத் துறையிலும் பாக்டீரியாக்கள் பெரிதும் பயன்படுகின்றன.


பாக்டீரியாக்களினால் ஏற்படும் தீமைகள் யாவை?

வெண்ணெய், காய்கள், பழங்கள், இறைச்சி வகைகள் மேலும் உணவுப் பொருட்கள் ஆகியன அழுகி கெட்டுப்போகவும் மனிதர்கள், தாவரங்கள் விலங்கினங்கள் ஆகியவற்றிற்குச் சிலவகை நோய்கள் ஏற்படவும் பாக்டீரியாக்களே காரணம் ஆகும். உணவு நச்சாவதற்கு (Food Poisoning) சிலவகை பாக்டீரியாக்களே காரணமாகும்.


மோட்டார் சைக்கிளை உலகுக்குக் காட்டியவர் யாவர்?
1848ம் ஆண்டு "எட்வர்டு பட்லெட்" என்ற இங்கிலாந்து நாட்டுமேதை கண்டறிந்தார். இதை 1885ம் ஆண்டு "டெய்ம்லர்" என்பவர் உலகறியச் செய்தார். முதன் முதலாக முனீச் நகரில் 1893ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் தயா¡¢க்கும் தொழிற்சாலை துவங்கப்பட்டது.


இயந்திரத் துப்பாக்கியைக் கண்டு பிடித்தவர் யார்?

1861ம் ஆண்டு "ரிச்சர்டு ஹாட்லிங்" என்ற அமெரிக்க நாட்டவர் கண்டறிந்தார்.


திரைப்படங்களில் முதன் முதலாக இசையை ஒளிப்பதிவு செய்து ஒலிப்பரப்பிக் காட்டியவர் யார்?

1923ம் ஆண்டு மார்ச்சு மாதம் 13ம் நாள் "Dr. லீ டி பாரஸ்ட்" என்பவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அறிமுகப்படுத்தினார்.


பெண்டுலத்துடன் கூடிய கடிகாரத்தைக் கண்டறிந்தவர் யார்?

1657ம் ஆண்டு "கிறிஸ்டின் ஹைஜென்ஸ் என்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் கண்டறிந்தார்.

Monday, March 27, 2006

தச்சந்தோப்பான் தனிப்பக்கம்

பெயர் : ச. திவாகரன்
வசிப்பிடம் : கொழும்பு, இலங்கை.
பிடித்தவை : புத்தகங்கள், கணனி, a.r.rehman, நல்ல தமிழ் படங்கள்